வீழ்வது நாமாக இருப்பினும்வாழ்வது தமிழாக இருக்கட்டும
என் இனிய தமிழ் நண்பர்களே வணக்கம்.திரவியம் தேட திரைகடலுக்கு அப்பால் இருந்து நான் உங்களிடம் பேசுகிறேன்.நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டத்தில் பாட்டுக்கவிஞர் கல்யாணசுந்தரம் பிறந்த பட்டுக்கோட்டை வட்டத்தில் எட்டுப்புலிக்காடு என்னும் அழகிய கிராமத்தில் காசியம்மாள் ரெங்கசாமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தேன் திருச்சி பெரியார் கல்லூரியின் பாரம்பாரியம்தான் இளமாணவனாக இருந்த என்னை இலக்கிய சோலைக்கு இழுத்து சென்றது.பட்டுக்கோட்டை நகர திரவிடர் கழக இளைஞரணி செயலாளராக நான்கு ஆண்டுகள் பொது தொண்டாற்றினேன். தஞ்சை மாவட்ட கவியரசு வைரமுத்து இலக்கியப் பேரவையில் உறுப்பினரானேன்.ஈழத்தமிழர் பிரச்சனைக்காக நடந்த போரட்டங்களில் பங்கெடுத்து பலமுறை சிறை சென்றேன். பதினேழு கிரமங்களுக்கு சென்று படிப்பறிவில்லா மக்களை சந்தித்து அறிவொளி இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவரால் பாரட்டும் சான்றிதழும் பெற்றேன்.
நான் எழுதிய கவிதைகளை ஒரு கவிதை நூலாக 2002ல் குவைத்தில் வெளியிட்டேன்.டென்மார்க் வானவில் இணையதளம் எனக்கு 2001ல் கலைமாமணி விருது கொடுத்து கவ்ரவித்தது.இந்த பாலைவனச் சோலையில் வற்றாத நீரூற்றாய் வெளிவந்த கவிதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.இது என் தோட்டத்தில் பூத்த மலர் என்பதால் என் கண்களுக்கு எடுப்பாகவே தெரிகிறது.உங்களுடைய கருத்துக்களையும் எனக்கு தெரியப்படுத்துங்கள்...
நம்பிக்கையுடன்
ரெ.வீரபத்திரன்
துபாய்
ليست هناك تعليقات:
إرسال تعليق